திங்கள், 29 டிசம்பர், 2008

இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்று இரண்டாவது நாளாக தொடர்ந்து குண்டு வீசி தாக்குதல் !.


ஜெருசலேம்:

காசா எல்லைப் பகுதியில் இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்று இரண்டாவது நாளாக தொடர்ந்து குண்டு வீசி தாக்குதல் நடத்தின. இதுவரை நடந்துள்ள தாக்குதலில் 280க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்று முன்தினம் அதிரடியாக குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின.

இதில் ஏராளமானோர் பலியாயினர். இதற்கிடையே, இஸ்ரேல் போர் விமானங்கள் இரண்டாவது நாளாக நேற்றும்காசா எல்லைப் பகுதியில் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின. இதில் ஏராளமான கட்டடங்கள் தரை மட்டமாயின. இதுவரை நடந்துள்ள தாக்குதலில் 280க்கும் மேற்பட்டோர் பலியாகி விட்டதாகவும், 800க்கும் மேற்பட்டோர்படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையே, ஹமாஸ் அமைப்பினர் மீது தரை வழியாகவும் தாக்குதலைத் துவங்க இஸ்ரேல் ராணுவம் தயாராகிவருகிறது. 6,000 ராணுவ வீரர்களை எல்லைப் பகுதிக்குச் செல்லும்படி உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து இஸ்ரேல்அதிகாரிகள் கூறுகையில், "ராணுவ வீரர்களை எல்லைக்கு அனுப்ப இஸ்ரேல் அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இதன்படி விரைவாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது' என்றனர்.

கருத்துகள் இல்லை: