புதன், 17 டிசம்பர், 2008

தெலுங்கு நடிகை பார்கவி கொலையில் மர்மம் நீடிக்கிறது!





சித்தூர், டிச.18:
தெலுங்கு நடிகை பார்கவி கொலை வழக்கில் மர்மம் நீடிக்கிறது.

ஐதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள அப்பார்ட்மென்ட்டில் வசித்து வந்த பார்கவி, நேற்று முன்தினம் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் உடலில் 8 இடங்களில் கத்திக்குத்து காயங்களுடன் பிணமாக கிடந்தார். அவருடைய மடியில் பிரவீன் என்பவர் இறந்து கிடந்தார்.

அந்த அறையில் இருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

அந்த கடிதத்தில், "லட்சுமி பார்கவியும் நானும் 2006, பிப்ரவரி 14ம் தேதி திருமணம் செய்து கொண்டோம். சினிமா நடிகையாக உயர்ந்த பிறகு பார்கவியின் தாயார் பானு பாரதி தனது மகளின் வளர்ச்சிக்காக என்னை அவமானப்படுத்தி, இருவரையும் பிரித்து விட்டார்" என பிரவீன் எழுதியுள்ளார்.

"தன்னுடன் சேர்ந்து வாழ மறுத்தால் பார்கவியை கொல்வதற்காக சயனைடு விஷம், கத்தியை பிரவீன் தயாராக கொண்டு சென்று இருக்கலாம்.

வீட்டில் பார்கவி கொடுத்த குளிர்பானத்தில் சயனைடு விஷத்தை கலந்து கொடுத்த பிறகு, அவர் உயிர் தப்பி விடக்கூடாது என்பதற்காக கத்தியால் கழுத்தை அறுத்தும், உடலில் பலமுறை பிரவீன் குத்தியும் இருக்கலாம்.

பின்னர், அதே சயனைடை சாப்பிட்டு பார்கவியின் மடியில் விழுந்து இறந்திருக்கலாம்" என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

சயனைடு கலந்த குளிர்பானம் கொடுத்து பார்கவி கொல்லப்பட்டதற்கான தடயம் எதுவும் கிடைக்கவில்லை என்றும் வேறு யாராவது கொலையில் சம்பந்தப்பட்டு இருக்கலாமோ என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: